Apr 24, 2012
மழை... புன்னகை... இதழ்... நீ...
எனது ஆழ் துக்கத்தையும்
சிதறடிக்கும் வல்லமை
உன் இதழ் பிரியாத
சிறு புன்னகைக்கு உண்டு ...
என் அகவைகள் அனைத்தும்
ஒவ்வொரு மைல் கல்லிலும்
முகாமிட்டு காத்திருக்கின்றன
நீ வரும் வழியெங்கும் ...
உன் நிழலாய் வருவதற்காக ...
சித்திரை வெயில்
உச்சி வேளையில்
கருமேகங்கள் சூழ்ந்து
மழை பொழிவது போல்
என்னை கடந்து சென்று
பின் நீ திரும்பி பார்ப்பது...
Mar 9, 2012
Dec 30, 2011
Oct 13, 2011
நிமிட நிலத்தில் பெய்த நினைவின் தூறலாய் ....
ஒரு மழை கால
மாலை வேளையில்
ஜன்னல் கதவுகள்
படபடக்க வந்த
சில்லென்ற காற்றில்
நிமிடங்களை கரைக்க
முயற்சிக்கையில் ...
அ ஆ ...
ஒன்றிரண்டு
சொல்லிக்கொடுத்த
ஆசிரியர்
கோலிகுண்டு
சொல்லிக்கொடுத்த
நண்பனின் அண்ணன்
வெள்ளை தாளில்
இடதொரமாய்
கோடுவரைய
கற்றுக்கொடுத்த
அருகாமை அக்கா
அவனுடன்
விளையாடும் போது
கோபம் கொள்ளும்
நண்பன்
அன்று
நான் சொந்தம்
கொண்டாடிய அவள்
அவ்வப்போது
வருகிறார்கள் !
நிமிட நிலத்தில் பெய்த
நினைவின் தூறலாய் ...
மாலை வேளையில்
ஜன்னல் கதவுகள்
படபடக்க வந்த
சில்லென்ற காற்றில்
நிமிடங்களை கரைக்க
முயற்சிக்கையில் ...
அ ஆ ...
ஒன்றிரண்டு
சொல்லிக்கொடுத்த
ஆசிரியர்
கோலிகுண்டு
சொல்லிக்கொடுத்த
நண்பனின் அண்ணன்
வெள்ளை தாளில்
இடதொரமாய்
கோடுவரைய
கற்றுக்கொடுத்த
அருகாமை அக்கா
அவனுடன்
விளையாடும் போது
கோபம் கொள்ளும்
நண்பன்
அன்று
நான் சொந்தம்
கொண்டாடிய அவள்
அவ்வப்போது
வருகிறார்கள் !
நிமிட நிலத்தில் பெய்த
நினைவின் தூறலாய் ...
Aug 1, 2011
அவள் போகும் பாதையில் ...
கண்களுக்கு இளைப்பாற
சிறு இடைவெளி கொடு
அதிகாலை முதல்
நிலவின் மடியில்
இரவு உறங்கும் வரை
உன் கண்கொள்ளா காட்சிகள்
என் விழிப்படலத்தில்
தேங்கி நிற்கின்றன !
அவை
காட்சிகளாய் விரிவதற்குள்
வானவில்லாய் நடப்பதும்
பூக்களென புன்னகைத்தும்
மழலை போல் மகிழ்வித்தும்
இம்சை செய்கிறாய் ...
என் கண்கள் என்னை
கடிந்து கொள்கின்றன
அவள் போகும் பாதையில்
நாம் நிற்க வேண்டாமென ...
சிறு இடைவெளி கொடு
அதிகாலை முதல்
நிலவின் மடியில்
இரவு உறங்கும் வரை
உன் கண்கொள்ளா காட்சிகள்
என் விழிப்படலத்தில்
தேங்கி நிற்கின்றன !
அவை
காட்சிகளாய் விரிவதற்குள்
வானவில்லாய் நடப்பதும்
பூக்களென புன்னகைத்தும்
மழலை போல் மகிழ்வித்தும்
இம்சை செய்கிறாய் ...
என் கண்கள் என்னை
கடிந்து கொள்கின்றன
அவள் போகும் பாதையில்
நாம் நிற்க வேண்டாமென ...
Subscribe to:
Posts (Atom)





