Apr 24, 2012

வாழ்க்கை




எதையும் எழுதாது
கசைக்கி எறிந்த
வெள்ளை தாள்
காற்றோடு தரையில்
அடித்துச் செல்வது போல்
ஒரு வாழ்க்கை ....

மழை... புன்னகை... இதழ்... நீ...


எனது  ஆழ் துக்கத்தையும்
சிதறடிக்கும் வல்லமை 
உன் இதழ் பிரியாத 
சிறு புன்னகைக்கு உண்டு ... 

என் அகவைகள் அனைத்தும் 
ஒவ்வொரு மைல் கல்லிலும் 
முகாமிட்டு காத்திருக்கின்றன
நீ வரும் வழியெங்கும் ...

உன் நிழலாய் வருவதற்காக ... 

சித்திரை வெயில்
உச்சி வேளையில்
கருமேகங்கள் சூழ்ந்து
மழை பொழிவது போல்
என்னை கடந்து சென்று 
பின் நீ திரும்பி பார்ப்பது...