Dec 13, 2010

நிறைவின்றி ...

 
 
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
துளிரும் மழைத்துளி போல் - உன் 
ஊடலில் உயிராய் தெரிகின்றது 
நம்  காதல்

உன் செல்ல வசைகளிலும்
உடையாத மௌனங்களிலும்
உணராத உயிர்... உறைகின்றது !

நின்  இதழ் கண்டு  சிவக்கும்
கீழ்வாண அந்தி பொழுதில்
வெய்யோன் வெட்கத்தில்
மறைகின்றான்  (மன)நிறைவின்றி ...