Feb 26, 2010

நீராவி



சூரியக் காதலனால்
நீர் காதலி
காற்றுக்கணவனுடன்
கலந்துவிட்டாள்
நீராவியாய் ...

அம்மா அன்றும் இன்றும்


அன்று
போரேன்மா என்றபோது
"போயிட்டுவரேன்னு சொல்லுப்பா"
என்றவளிடம்

இன்று
போயட்டுவரேன்பா என்றவளிடம்
ஒற்றை வார்த்தை "போ" என்ற பதிலாய்

Feb 15, 2010

விவாக(ம்)ரத்து



பெண்களுக்கென்று தனிவரிசை இல்லை
தயவுசெய்து வரிசையில் வரவும்
- நீதிமன்ற உத்தரவின்படி

பெற்றவர்களின் வாதங்களை
எதிர்த்து இனைந்தவர்கள்
வழக்குரைனர்களின் வாதங்களை
ஏற்று பிரிகின்றார்கள் ....

Feb 9, 2010

ஓர் அகதியின் தேசியகீதம்



கூழானாலும் குளிதுக்க்குடி
கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டு... என்று
பள்ளி பாடம் எழுதியவள்

கிழிந்த கந்தல் ஆடையுடன்
தண்ணீர் மட்டும் பருகிச் செல்கிறாள்
அகதிகள் முகாமில்...

ஒலிபெருக்கியில் தேசியகீதம்
பசிமயக்கத்தில் இதழ் பிரியாது
மெல்ல முனுமுனுக்கும் அப்பிஞ்சின்
நிலை கண்ட அவள் தோழி ...

சப்தமாக பாடு அப்போதுதான்
இறைவன் நம்மை இங்காவது
நிலைக்க செய்வான் என்றாள்

பிஞ்சுகளுக்கே உள்ள மொழியில்...

மதிய உணவு இடைவேளை
மணி ஒலித்தது
அச்சிறுமியின் முகம் மலர...

Feb 3, 2010

அசல்


தொலைக்காட்சியில்
பூ புனித நன்னீராட்டு விழா.
ஏக்கத்துடன் திருநங்கை..

நடைபாதை கடையில்
கால் இழந்தவரின் கையில்
ஓர் புத்தகம்
சொந்த கால்களில் நிற்பது எப்படி ?

கடற்கரை மணலில்
காதல் மனைவிக்கு
அழகிய மணல் வீடு கட்டினான்
ஏழை கட்டிட தொழிலாளி ...

நல்வரன் வேண்டி
கோவிலில் தட்சணை கொடுத்தவள்
தாய் வீட்டில் அன்பான கணவன்
நாடகம் பார்க்கிறாள்
வரதட்சனை கொடுக்க
வசதியின்றி...
.
.
.
முற்றுப் பெறாத முடிவுகள் ...