Mar 19, 2010

ச ரி க ம ப த நீ...அன்ன




எனை அழவைப்பதும் பின்
அரவணைப்பதும்

எனை விரும்புவதும் உனை
வெறுக்கவைப்பதும்

எனை கொஞ்சுவதும் பின்
கெஞ்சவைப்பதும்

எனை விலகுவதும் பின்
நெருங்கவைப்பதும்

எனை கோபப்படுத்துவதும் பின்
பொய் ஊடல் கொள்ளவைப்பதும்

எனை திமிர் நாடச்செய்தும் பின்
நாணப்பட வைப்பதும்

எனை காதலித்தும் பின்
காதல்பட வைத்ததும்

எனை எனக்கே பிடிக்கச்செய்தும்
பிறர் எனை மதிக்கச்செயததும்

நீ ..

ஓர் எழுத்தில் எழுதப்படாத
இரு வார்த்தைகள்...

பொய் சொல்லும் திருட்டே
மெய் சொல்லும் தமிழே
உயிர் கொண்ட உறவே
உயிர் கொண்ட அன்பே

காதலின் தவறே காதலின் பிரிவே
காதலின் தவிப்பே காதலின் தவமே
இவை யாவுமே நீ சொன்னால்
நான் உனை என்ன சொல்வேன்

உன் வார்த்தையில் நான் எனை தொலைத்தேன்
உன் அன்பிலே நான் மறந்தேன் என் தமிழே
உன் பாதையில் நான் தொலைத்தேன்
என் சுவடுகளை ...

உன் ஓர் பார்வையிலே சிக்கிதவிக்குதடி
என் வாழ்வின் ஓராயிரம் மணித்துளிகள் ...

தினந்தோறும்


தினந்தோறும்
வானவில் காண்கிறேன்
வைகறையிலும்
அந்திப்பொழுதிலும்
வெய்யோன்
உன் மேல்
விழும்போதெல்லாம் ...

வண்ணத்துபூச்சிகள்
வரலாறு கனாத
உண்ணாவிரதமாம் ...
மகரந்தத்தில் தேன்
இல்லையென்று
மலரென நினைத்து
உன்மேல்
தேன் உறிஞ்சியதால் ...