Feb 14, 2013

நீ...நானென்று


என்னுள் 
வியாபித்திருந்த 
உனது நினைவுகளால் ... ! 
பிறரால் அழைக்கப்பட்டேன் 
"நீயென்று" ... 
எனக்குள் உணர்ந்தேன்
 "நானென்று"

யாருமற்ற சாலை


கனத்த மனதுடன்
யாருமற்ற சாலையில்
நடக்கும் போது
என் பாதம் சுற்றிச்சுற்றி
எச்சில் செய்யும்
நாய் குட்டியிடம்
தோற்றுத்தான் போகிறது
என் கசப்பான
சூழ்நிலைகள் ....