Apr 8, 2010

தீக்குச்சி சொல்லும் கவிதை




கரும்பலகை பாடம் கற்றலின்றி
கருப்பு மருந்து புனைகிறார்கள்
பற்ற வைத்த நானும்
பற்றில்லாமல் தான் எரிகிறேன்
பாலகர்களின் உழைப்பினை எண்ணி

பாராட்டு விழா


"கல்வி கட்டாயமாக்கிய
நடுவண் அரசுக்கு
பாராட்டு விழா"

வண்ண சுவரட்டிகளை
நூறாய் பிரித்து
கட்டுகிறார்கள்

அகவை ஏழினை தொட்ட
சிறுவனும் சிறுமியும்
அச்சகத்தில் ...