Mar 28, 2010

ஞாயிறு மதியம்



ஞாயிறு மதியம்
குட்டித்தூக்கம் கண்களின்
மேல் தீராக் காதல்
சன்னலோரமாய் படுகையில்
தூக்கத்தின் காதலையாவது
நிறைவேற்ற ...

தீடீர்ரென்ற மின்வெட்டு
காற்றினை அனுமதிக்க
கதவினை திறக்கின்றேன்
எதிர் திண்ணையில் நீ

உன் கையில் சுஜாதாவின் நாவல்
உன் முகம் மறைத்து... புத்துணர்வின்
அர்த்தம் என்னுள் விளங்கியது

பழைய தினத்தந்தி என் கையில்
உன் எதிர் திண்ணையில் நான்
சாய்வு நாற்காலியில் தாத்தா
போய் வெற்றிலை வாங்கிவா என்று
இன்னும் நீ நாவலுக்குள் ...

உள்சென்று உடைகளுக்குள் புகுந்து
வெளியேவரும் வேளையில் உன் அம்மா
தெருமுனையில் கருவேப்பிலை
வங்கி வரச்சொல்லி... மாற்றமின்றி
நாவலுக்குள் உன் முகம்....

அம்மாவின் கட்டளை நிறைவேற்ற
உள்சென்று நாணயம் எடுக்க நீ ...
நாவல் மட்டும் திண்ணையை
முத்தமிட்டுக் கொண்டு ...

கள்ளத்தனமாய் நாவல் எடுக்கின்றேன்
நடுபக்கத்தில் நான் எழுதிய கடிதமும்
என் கடவுச்சீட்டு புகைப்படமும் ...

எறும்பின் ஏக்கம் ...



சுழல் நீரில் சிக்குண்ட
இலை மேல் நான்
முடிவுகள்.. சில நொடிகள்
தள்ளிப் பயணிக்கிறேன்

அச்சில நொடிகளில்
வாழ்வினை ரசிக்கும்
வரம் தந்த இறைவனை
மறவாமல்...

ஒருபுறம் விண்ணை
முட்டும் அல்லியும் தங்க
கதிரவனின் காதலியும்
என் கண்முன் ...

மறுபுறம் முரட்டு
வாய் பிளக்கும்
கெண்டை கெளுத்தியும்
சர்பம கொண்ட விஷமும் ...

எதை ரசிக்க எனை மறக்க
என்ற ஒரு சூழலில் சுழலின்று
விடுபட்டு மெல்லிய ஓடையில்
மிதமாய் பயணிக்கிறது
இலை மட்டும் ...

எச்சூழலிலும் வாழ்வினை
ரசித்திட வேண்டும் என்ற
எண்ணம் மட்டுமே...நான்
நீரில் முழ்கியவாறே ...