Jun 28, 2009

என் சிரிப்பின் பின்னால்


இருக்கும் போது
திரும்பிக்கூட பார்க்காதவள்
இன்று ஏக்கத்தோடு
கடந்து செல்கின்றாள்
என் கல்லறையை...

அவளின் குழந்தைகள்
தமது அப்பாவிடம்
அம்மா அழுகின்றாள் !
அங்கு வரும்போது மட்டும் என்றுகூற...

அவரோ
என் சிரிப்பின் பின்னால்
அவளின் அழுகை மட்டுமே
மாறாத உண்மை என்றார்
தன்னுள்ளாகவே ...

Jun 22, 2009

உன் விழிகள்...


சத்தமின்றி
ஒரு யுத்தம் உன் விழிகள்...
யுத்தமின்றி ஒரு சகாப்தம்
நம் காதல் ....