May 15, 2016


ஒரு வரம் வேணுமடி ..



உன்னிடம் தோற்பதற்கும் 
ஒரு வரம் வேணுமடி ...
நீயின்றி வாழும் 
ஒரு கணம் ...

என் இதயம் 
இலக்கணத்தை பிரிந்த
தமிழ்மொழியாய் தவிக்கிறது ...


உன்னுள் சரணடைந்தேன் 



தவமிருந்து
உன்னை சரணடைந்தேன்
உன்னுள் கருவாய் ...

சொல்லொணாத் துயரத்திலும் 
வேதனைமிகு சூழலிலும்
ஈரைந்து மாதங்கள்
பனிக்குடத்திலும் இதயத்திலும்
கருவாய் எனை சுமந்து
மறுபிறவி கண்டு !!!
இருவரும் சந்தித்தோம் ...

உனக்கெனவே நான் ...
வரும் காலங்களில்
உன் கண்களில் இனி
உவகைக்கண்ணீர் மட்டுமே
வேறொன்றும் யான் வேண்டேன்
உன்னிடம் ..."