Jun 27, 2010

காதலாகி போன நினைவுகள்


எங்கு காணினும்
காதலாகி போன
நினைவுகள்

கொடுப்பதும்
பறிப்பதும்
நீ என்றால்
நான் எதற்கு ?

நான் சிந்திக்காமல்
மொழிந்த வார்த்தைகள்
சந்திக்காமல் செல்கின்றது
உன் மௌனங்களுடன்

எப்போதும் தள்ளி நின்றே
ரசிகப் பழகியவனுக்கு
அருகாமை ஆபத்துதான் ...

கண்களால் கதைக்காதே
ஒரு முறையேனும்
விழிகளால் பார்
உதடுகளால் பேசு
இதயத்தில் இரக்கம் காட்டு ...

Jun 24, 2010

மணல் வாசனை


ஆற்றங்கரை மணலில்
கை கோர்த்து நடந்துவந்த
பாதசுவடுகள்
எங்கோ மறைந்து விட்டன
அச்சுவடுகள் ஏதேனும்
ஒரு கட்டிடத்தில் ஏக்கத்தொடு
பெருமூச்சு விட்டுகொண்டிருக்கும்
தாய் மண்ணும் நம்மோடு
எப்போது சேரும் என்று !

எதிரே
ஓர் மணல் லாரி
பல பெருமூசுகளை
ஒரே மூச்சுடன்
சாய்க்கின்றது ....

Jun 13, 2010

அதில் நானும் ஒருவனாய்...


சாலையோர
ஓவியனை சுற்றி
பெருங்கூட்டம் ...

அந்த 'ஈ' க்கு மட்டும்
யாருக்கும் இல்லாத அக்கறை
அவன் முகத்தில் அமர்ந்து
ஓலமிட்டு அழுகின்றது ...

மனிதனிடம்
அபிமானம் மட்டுமின்றி
மனிதாபிமானம் பாருங்கள்
என்ற ஓவியத்தின் அர்த்தம்
அதற்கு மட்டும் புரிந்ததோ ?

நொடிகள் கரைய
நெடி பரவ
கலைந்தது கூட்டம்
அதில்
நானும் ஒருவனாய்...

கடந்தபின் மனம்
நெருடுகின்றது ...
இயலாமை எப்போதும்
இல்லாமையால்....

Jun 8, 2010

வெட்கத்தில் கொட்டிக்கிடக்கின்றது...


நீ விட்டுச்சென்ற வெட்கத்தில்
கொட்டிக்கிடக்கின்றது மிச்சம் ...
உன் வெட்கத்திற்கும்
நம் மௌனத்திற்கும்
குழந்தையாய் பிறக்கின்றது
உன் இதழோரம் சிறு புன்னகை ...