Aug 1, 2011

அவள் போகும் பாதையில் ...

கண்களுக்கு இளைப்பாற
சிறு இடைவெளி கொடு
அதிகாலை முதல்
நிலவின் மடியில்
இரவு உறங்கும் வரை
உன் கண்கொள்ளா காட்சிகள்
என் விழிப்படலத்தில்
தேங்கி நிற்கின்றன !

அவை
காட்சிகளாய் விரிவதற்குள்
வானவில்லாய் நடப்பதும்
பூக்களென புன்னகைத்தும்
மழலை போல் மகிழ்வித்தும்
இம்சை செய்கிறாய் ...

என் கண்கள் என்னை
கடிந்து கொள்கின்றன
அவள் போகும் பாதையில்
நாம் நிற்க வேண்டாமென ...

பொதுஜனம் கண்ட வெட்கத்துடன்


பேருந்தின் இருக்கையில் 

கடற்கரை மணலில்
திரையரங்கின் இருளில்

மனம் மௌனமாகிய சூழலில்
காமம் எனும் மொழி கொண்டு
காதலை படிக்கும் விரசங்களில்

காதல் ..... சற்றே விலகி
விரசம் மட்டுமே அரங்கேறுகிறது
பொதுஜனம் கண்ட வெட்கத்துடன் ... 

என்னுடைமை என்று ....


நீ வாசலில்
புள்ளிதான் வைக்கிறாய்
ஆயிரம் கோலங்கள்
என் மனதில் ...

ஒத்திசைவாய் நீ அமர்ந்து
உன் நெற்றி பனித்துளிகளை
துடைக்கையில் தரையோடு மோதும்
பட்டு ஜரிகையில்
உன் கன்னத்தின் குழியும்
இதழோர மச்சமும்
மிச்சமின்றி பிரதிபலிக்கின்றன

உன் அழகையும்
என் மனநிறைவையும்

என்னுடைமை என்று ....