Jan 25, 2011

நிகழாதகவு

ஒரு முறையேனும்
திரும்பிப் பார்
உனக்காக தவமிருக்கும்

என் கனவுகளும்
கற்பனைகளும்

எனது மொழியும்
மௌனங்களும்

புன்னகையும்
சிறு சோகமும்

கேள்வியும்
பதில்களும்

மீண்டும் மீண்டும்
புதிதாய் பிறக்கின்றன
கருவுறாமலே ...

நான் அன்றே பெண்ணாய் பிறந்ததால்


துளி தேன் மிகை அமுது
நிறை மகிழ்வு சிறு ஊடல்
தித்திக்கும் தமிழ் கண்ட
திகட்டா காதல் கொண்டு
நான் பெற்றுடுத்த மகவு

வெண்மதி
அவள் முகம்

பிற்பகல் கலந்த
கிழ்வான சிகப்பு
அவள் நிறம்

பூத்துகுலுங்கும் ரோஜா
அவள் புன்னகை

அன்னம்போல் மேனி
எழில் வென்ற விழிகள்
காண திகட்டா குறும்புடன்
சர்வமங்கலமாய் பிறந்தவள்
என் செல்ல மகள் ...

புரிய இயலா சமூகத்தில்
உனை பிரசவித்து
கள்ளிப்பால் வருவதற்குள்
உனக்குமுன்
விடைபெறுகின்றேன்
நான் அன்றே பெண்ணாய்
பிறந்ததால் ...