Feb 3, 2010

அசல்


தொலைக்காட்சியில்
பூ புனித நன்னீராட்டு விழா.
ஏக்கத்துடன் திருநங்கை..

நடைபாதை கடையில்
கால் இழந்தவரின் கையில்
ஓர் புத்தகம்
சொந்த கால்களில் நிற்பது எப்படி ?

கடற்கரை மணலில்
காதல் மனைவிக்கு
அழகிய மணல் வீடு கட்டினான்
ஏழை கட்டிட தொழிலாளி ...

நல்வரன் வேண்டி
கோவிலில் தட்சணை கொடுத்தவள்
தாய் வீட்டில் அன்பான கணவன்
நாடகம் பார்க்கிறாள்
வரதட்சனை கொடுக்க
வசதியின்றி...
.
.
.
முற்றுப் பெறாத முடிவுகள் ...

No comments:

Post a Comment