Mar 4, 2010

அவ்வீதி




உன் கைபிடித்து நடந்து வந்த வீதி
இன்று வெறுமையாய் காட்சியளிக்கிறது
உன்னுடன் நான் விரும்பிய தனிமை
இப்பொது வீதிக்கு கிடைதிருகின்றது
ஒவ்வோர் முறையும் அதில் நடக்கையில்
அது உன் நியாபகங்களையே
நியாபகப்படுத்தும் ...

பிறப்பு முதல் இறப்பு வரை
வரம் முதல் சாபம் வரை
அனைத்தையும் கண்ட அவ்வீதி
இன்று விதியின் பிடியில்

தீண்டாமைத் தொற்றுநோயால்
மனிதத்தின் வக்கிரமும் சமூகத்தின்
சலனமற்ற மூடநம்பிக்கைகளும்
அரசியல் சாயம் பூசிக்கொண்டு
யாருமற்ற தனிமையில் அவ்வீதி...

பாரத்துடன் வண்டி
இழுத்துச்செல்லும் முதியவர்
சீருடையில் பள்ளி குழந்தைகள்
மணலில் விளையாடும் மழலையை
கண்டிக்கும் தாய்
வீதியை பார்த்தவாறு திண்ணையில்
வெற்றிலை கொட்டும் மூதாட்டி ....

இப்போது யாருமில்லை
வீதி மட்டும் வீணாய் இருக்கிறது
முன்பிருந்த அழகினை
விட்டுக்கொடுதுவிட்டு...

No comments:

Post a Comment