Mar 8, 2010

இரண்டெழுத்து கவிதையாக




மொட்டுகளாய் துளிர்த்து
சிறுமியாய் மலர்ந்து
பூவாய் பூப்பெய்து
மனைவியாய் சூல்முடி தரித்து
மீண்டும் மழலையை விதையாய்
விதைக்கிறாள்... தாய்மையால்
விளங்கப்பெறும் பெண்மை ...

அன்னையாய் அன்பையும்
சகோதரியாய் பாசத்தையும்
தோழியாய் நட்பையும்
மனைவியாய் இல்லறத்தையும்
காதலியாய் காதலையும்
பெண்ணாய் நம்பிக்கையும்
தருபவள்...அவள் என்னுள்
யாதுமாகி நிற்பவள்.... பெண்னென்ற
இரண்டெழுத்து கவிதையாக ...

No comments:

Post a Comment