Mar 14, 2010

உன் பாதங்களில் என் பயணம் ...


மரங்களடர்ந்த சாலையோரம்
ஓர் அந்தி மாலைநேரம்
என்றும்போல் காத்திருக்கிறேன்

பலமுறை ஒத்திகையில்
இம்முறை துளிர் நம்பிக்கை
அமைதி சூழலை ஆரவாரமின்றி
உடைக்கையில்

மனதில் இனம்புரியா பயம்
நீ ஏற்பதும் இகழ்ப்பதும் ?
இருபினும் என்முயற்சி ....

தென்றலுக்கும் நடை
கற்றுக் கொடுத்தவளாய்
நீ கடந்து செல்கின்றாய் ...

உன் காலணிகளை பார்கிறேன்
மீண்டும் பயம் தொற்றிக்கொள்கிறது
கேட்டுவிட்டேன் நான்

"அம்மா உங்க செருப்ப
தைக்காமலே போறிங்களே "


திரும்பியவள் ...


"மீதியை நீங்களே வச்சுகோங்க
என்று வார்த்தைகளை முடித்தாள்"...

சில நொடிகளில்
மீதியும் சேர்த்து
தேனீர் கடையில் ...

No comments:

Post a Comment