Mar 28, 2010

எறும்பின் ஏக்கம் ...



சுழல் நீரில் சிக்குண்ட
இலை மேல் நான்
முடிவுகள்.. சில நொடிகள்
தள்ளிப் பயணிக்கிறேன்

அச்சில நொடிகளில்
வாழ்வினை ரசிக்கும்
வரம் தந்த இறைவனை
மறவாமல்...

ஒருபுறம் விண்ணை
முட்டும் அல்லியும் தங்க
கதிரவனின் காதலியும்
என் கண்முன் ...

மறுபுறம் முரட்டு
வாய் பிளக்கும்
கெண்டை கெளுத்தியும்
சர்பம கொண்ட விஷமும் ...

எதை ரசிக்க எனை மறக்க
என்ற ஒரு சூழலில் சுழலின்று
விடுபட்டு மெல்லிய ஓடையில்
மிதமாய் பயணிக்கிறது
இலை மட்டும் ...

எச்சூழலிலும் வாழ்வினை
ரசித்திட வேண்டும் என்ற
எண்ணம் மட்டுமே...நான்
நீரில் முழ்கியவாறே ...

No comments:

Post a Comment