Mar 30, 2010

முன் தின மறுநாள்




முன் தின மறுநாள்
யாமம் களவுகொடுத்த வைகறையில்
செந்நிறப்பட்டு உடுத்தி
செஞ்சாந்து பொட்டிட்டு
மஞ்சள் பூசிய முகமும்
இதழ் மலரும் புன்னகையுடன்
நீ வருகிறாய்
குளிர்பொருட்டின்று நிற்கிறேன்
உன் தரிசனம் காண

நீயோ சிம்மபல்லக்கில்
வாணவேடிக்கையும்
மேளதாளம் முழங்க
கம்பீரமாய் பவனி வருகிறாய் ...
உன் பக்தர்களுக்கு அருள்புரிய
திருவிழா தித்திக்கும் விழாவானது

No comments:

Post a Comment