Apr 5, 2010

வள்ளி முருகன் நெடுஞ்சாலை உணவகம்



அவருக்கு பொடியன்
அந்தம்மாவிற்கு தம்பி
சக பணியாளனுக்கு டேய்
மதுரைக்கு எலே சின்னு
கோவைக்கு டேய் ராசு...

அவளுக்கு "முருகா"
அவள் உச்சரிப்பில்
என் அம்மாவின் நினைப்பு
நானூறு மைல்களுக்கு அப்பாலும் ...

வைகறை உறக்கம் யாமப்பணி
ஒவ்வொரு பேருந்தின் ஒலியிலும்
கண்களில் நித்திரை கரையும் ...

தட்டி தட்டி எழுப்புவோம்
பயணிகளின் தூக்கம் கலைக்க
கல்லா நிறைக்க ...
சினம் சாபம் திட்டுகள்
பொருட்படுத்தாது ...

இளையராஜா பாடல் !
செவி நோகும் அளவு
இரைச்சலில் ...

நின்ற பேருந்து புறப்படுகையில்
ஏதோ சொந்தம் சொல்லிக்காமல்
செல்வது போல் ...

இம்முறையேனும் காசு சேர்த்து
நெல்லை வண்டிக்கு செல்ல வேண்டும்
ஓடி வந்த நான் அம்மாவை பார்க்க ...

1 comment:

  1. Nice to See this..
    Dear Yuva..

    It is nice to see the different characters like "Murugha" as hero of the Poem Other than Love.And lot more characters are left out.

    Keep it up & try to write those thing also.

    Once Again Thanks for Murugha as Hero

    One small suggestion try to keep peppy names like your previous posts
    உன் பாதங்களில் என் பயணம் ...
    காதல் செய்து கிடப்பதே
    இப்படிக்கு வெட்கம்

    ReplyDelete