Jan 11, 2013

மார்கழியின் கோலவாசல் ...




இல்லத்தில்
மனம் இருப்புகொள்ளாது
அம்மாவின்
சொல் எத்தனித்து
மார்கழியின்
கோலவாசல் கடக்கையில்

எனதெதிரெ
புருவம் உயர்த்தி
கண்கள் துழாவி
நீ உட்செல்லும்போது

உனக்காக
உயில் எழுதிய உயிரும்
மனமும் ஒப்பந்தபுள்ளி
கோருகின்றது
அழகிய பொய் வேண்டி
இல்லம் நுழைய ...

No comments:

Post a Comment