Mar 11, 2009

நான் சம்பாதித்தவை...


கையில் காசில்லை
காதலுக்கு மட்டும் குறைச்சலில்லை...
பயணம் செய்வதற்கு மட்டுமே பணம்...
எனக்கெனவே வந்தது உணவகம் நில்லா பேருந்து...

என்னவளுடன் புதுப்பாதை தேடிய பயணம்
என்மனம் புரியாதா என்னவளுக்கு...
முகமோடு முகம் அவளின் மூச்சுக்காற்று
என்னை கலவரப்படுத்தியது...காதருகில்
மெல்ல கூறினால் என்னக்கு பசிக்கவில்லையேன்று

அந்த பொய்கூட அழகாய் இருந்தது அச்சூழ்நிலையில்..
மின்விளக்குகள் அணைக்கப்பட
நிலவொளியில் எனது நிலவுடன் பயணம்...
விடியலின் மடியில்... நின்றது பேருந்து...

என்னிலை தெரிந்து
எங்களுக்காக காத்திருந்தான் எனது நண்பன்....
புதுவாழ்கையை துவக்கி வைப்பதற்காக!!!

No comments:

Post a Comment