Apr 13, 2010

நாமாய் பேசிய நாட்களை ...



உன் சில கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை
இபோதெல்லாம் கேள்விகளே
வாழ்கையாய் போனதால்

என் நோக்கம் உனை
காயப்படுத்துவது அல்ல
என் காயத்தில் புதைந்த
உனை வெறுக்கவும் முடியவில்லை
உனை விரும்ப நீயும் அனுமதிப்பதில்லை
இப்போதும் காதலிக்கிறேன் நீயும்
நானும் நாமாய் பேசிய நாட்களை ..

உனை பிரிந்து விடு என்று சொல்
எனை மறந்து விடு என்று சொல்லாதே ...
உனை விடுத்தது வேறொரு பெண்
நிச்சியமாக இல்லை என் வரலாற்றில் ...

உனை பிரிகிறேன்
பிறகெப்போதவது நீ
எனை சந்தித்தால்
சின்னதாய் ஒரு பொய் மட்டும் சொல்லடி
நான்  நலம் என்று...
காத்திருக்கிறேன் நாம் சந்திக்கபோகும்
அந்த நிமிடங்களை எண்ணி ...

No comments:

Post a Comment