Apr 28, 2010

அவளும் மழையும் ...



கண்களுக்குள் மின்னலாய்
உட்சென்றவள் இதயத்தில்
இடியாய் இறங்கிவிட்டாள்

காதல் மழை பொழியும்
தருவாயில் காற்றினில்
கலைந்த மேகம் போல்

நிஜங்களை கரைத்துவிட்டு
நினைவுகளை அசைபோட
கற்றுக் கொடுத்தவளுக்கு
தெரிய வாய்ப்பில்லை ...

வானம் பார்த்த பூமியின்
ஏக்கமும் ஏமாற்றமும்
அவளிடம் சினம் பூண்டு
மேலும் ரணம் கொள்ளவில்லை ...

அவளை வெறுக்கவுமில்லை...ஆனால்
விரும்புவதை தவிர்க்கிறேன்
என்னிடம் அவள் அதனையே
விரும்புவதால்...

No comments:

Post a Comment