Jun 24, 2010

மணல் வாசனை


ஆற்றங்கரை மணலில்
கை கோர்த்து நடந்துவந்த
பாதசுவடுகள்
எங்கோ மறைந்து விட்டன
அச்சுவடுகள் ஏதேனும்
ஒரு கட்டிடத்தில் ஏக்கத்தொடு
பெருமூச்சு விட்டுகொண்டிருக்கும்
தாய் மண்ணும் நம்மோடு
எப்போது சேரும் என்று !

எதிரே
ஓர் மணல் லாரி
பல பெருமூசுகளை
ஒரே மூச்சுடன்
சாய்க்கின்றது ....

No comments:

Post a Comment