Jun 13, 2010

அதில் நானும் ஒருவனாய்...


சாலையோர
ஓவியனை சுற்றி
பெருங்கூட்டம் ...

அந்த 'ஈ' க்கு மட்டும்
யாருக்கும் இல்லாத அக்கறை
அவன் முகத்தில் அமர்ந்து
ஓலமிட்டு அழுகின்றது ...

மனிதனிடம்
அபிமானம் மட்டுமின்றி
மனிதாபிமானம் பாருங்கள்
என்ற ஓவியத்தின் அர்த்தம்
அதற்கு மட்டும் புரிந்ததோ ?

நொடிகள் கரைய
நெடி பரவ
கலைந்தது கூட்டம்
அதில்
நானும் ஒருவனாய்...

கடந்தபின் மனம்
நெருடுகின்றது ...
இயலாமை எப்போதும்
இல்லாமையால்....

No comments:

Post a Comment