Jun 27, 2010

காதலாகி போன நினைவுகள்


எங்கு காணினும்
காதலாகி போன
நினைவுகள்

கொடுப்பதும்
பறிப்பதும்
நீ என்றால்
நான் எதற்கு ?

நான் சிந்திக்காமல்
மொழிந்த வார்த்தைகள்
சந்திக்காமல் செல்கின்றது
உன் மௌனங்களுடன்

எப்போதும் தள்ளி நின்றே
ரசிகப் பழகியவனுக்கு
அருகாமை ஆபத்துதான் ...

கண்களால் கதைக்காதே
ஒரு முறையேனும்
விழிகளால் பார்
உதடுகளால் பேசு
இதயத்தில் இரக்கம் காட்டு ...

1 comment:

  1. //நான் சிந்திக்காமல்
    மொழிந்த வார்த்தைகள்
    சந்திக்காமல் செல்கின்றது
    உன் மௌனங்களுடன்//

    ( அழகிய முரண்..! ரசித்தேன் இவ்வரிகளை )

    // கண்களால் கதைக்காதே
    ஒரு முறையேனும்
    விழிகளால் பார் //

    ( அர்த்தம் பிறழ்ந்த முரண்..! ஏன்.? )

    ReplyDelete