Jan 25, 2011

நிகழாதகவு

ஒரு முறையேனும்
திரும்பிப் பார்
உனக்காக தவமிருக்கும்

என் கனவுகளும்
கற்பனைகளும்

எனது மொழியும்
மௌனங்களும்

புன்னகையும்
சிறு சோகமும்

கேள்வியும்
பதில்களும்

மீண்டும் மீண்டும்
புதிதாய் பிறக்கின்றன
கருவுறாமலே ...

No comments:

Post a Comment