Jan 25, 2011

நான் அன்றே பெண்ணாய் பிறந்ததால்


துளி தேன் மிகை அமுது
நிறை மகிழ்வு சிறு ஊடல்
தித்திக்கும் தமிழ் கண்ட
திகட்டா காதல் கொண்டு
நான் பெற்றுடுத்த மகவு

வெண்மதி
அவள் முகம்

பிற்பகல் கலந்த
கிழ்வான சிகப்பு
அவள் நிறம்

பூத்துகுலுங்கும் ரோஜா
அவள் புன்னகை

அன்னம்போல் மேனி
எழில் வென்ற விழிகள்
காண திகட்டா குறும்புடன்
சர்வமங்கலமாய் பிறந்தவள்
என் செல்ல மகள் ...

புரிய இயலா சமூகத்தில்
உனை பிரசவித்து
கள்ளிப்பால் வருவதற்குள்
உனக்குமுன்
விடைபெறுகின்றேன்
நான் அன்றே பெண்ணாய்
பிறந்ததால் ...

No comments:

Post a Comment