Aug 1, 2011

என்னுடைமை என்று ....


நீ வாசலில்
புள்ளிதான் வைக்கிறாய்
ஆயிரம் கோலங்கள்
என் மனதில் ...

ஒத்திசைவாய் நீ அமர்ந்து
உன் நெற்றி பனித்துளிகளை
துடைக்கையில் தரையோடு மோதும்
பட்டு ஜரிகையில்
உன் கன்னத்தின் குழியும்
இதழோர மச்சமும்
மிச்சமின்றி பிரதிபலிக்கின்றன

உன் அழகையும்
என் மனநிறைவையும்

என்னுடைமை என்று ....

No comments:

Post a Comment