Aug 1, 2011

அவள் போகும் பாதையில் ...

கண்களுக்கு இளைப்பாற
சிறு இடைவெளி கொடு
அதிகாலை முதல்
நிலவின் மடியில்
இரவு உறங்கும் வரை
உன் கண்கொள்ளா காட்சிகள்
என் விழிப்படலத்தில்
தேங்கி நிற்கின்றன !

அவை
காட்சிகளாய் விரிவதற்குள்
வானவில்லாய் நடப்பதும்
பூக்களென புன்னகைத்தும்
மழலை போல் மகிழ்வித்தும்
இம்சை செய்கிறாய் ...

என் கண்கள் என்னை
கடிந்து கொள்கின்றன
அவள் போகும் பாதையில்
நாம் நிற்க வேண்டாமென ...

No comments:

Post a Comment