Aug 14, 2013

அழகாய் தெரிந்தது....காதல்








பெருநகர சாலையின் 
கார்பன் தூசுக்கள் 
அலுவல்களின் 
விருப்பு வெறுப்புகள் 
கடந்து 

தனிமை குப்பைகளும் 
வெறுமை வெற்றிடமும் 
நிரம்பி வழியும் 
இல்லம் நுழைகையில் 

அலைபேசியில் 
குறுஞ்செய்தியாய் 

" தனிமைக்கும் 
நினைவுகளுக்கும் 
நான் இரையாகி 
நோகிறேன் ...
எப்போதென்னை  
அழைத்து போகிறாய் " என்று 

வார்த்தைகள் 
வலிக்கும் வரை 
யோசிக்கிறேன்
அகப்படவில்லை 
அவளுக்கு பதிலளிக்க 

பிரிவின் வலிதனில் 
நினைவின் காட்சிகள் 
நிமிடங்களை 
தின்றுகொண்டிருக்கையில் 

உனக்காக 
காத்திருந்து 
வாசல் நோக்கி 
வெளிநடப்பு 
செய்யும் எறும்புகள் ...

ஒரு குற்றுழி
இருப்பு கொள்ளாது 
பயணமானேன் 

அழகாய் தெரிந்தது....காதல்

No comments:

Post a Comment