Mar 7, 2009

நீ வகுப்பறைக்கு வராத நாட்களில்



நீ வகுப்பறைக்கு வராத நாட்களில் ...
இயற்பியல் புரியவில்லை
வேதியியல் விளங்கவில்லை
கணிதம் தெரியவில்லை
நீ வகுப்பறைக்கு வந்த நாட்களில்

இயற்பியல் !
எனது ஒவ்வொரு பார்வைக்கும் சமமான
அல்லது எதிரான பார்வை உன்ன்னிடமிருது ...

வேதியியல் !
உன் மௌனம் என்னை கரைக்கும் கரைசல்...
உன் புன்னகை என்னை சிதறடிக்கும் கூழ்மம்...
உன் பார்வை என்னுள் உண்டாகிய தொங்கல்...

கணிதம் !
உன் கண்சிமிட்டலே என் தேற்றங்கள்...
உன் புன்னகையே நிகழ்தகவு...
உன் பார்வைகளே என் நவீன இயற்கணிதம்...

No comments:

Post a Comment