Mar 7, 2009

என் தாய் தகப்பன் தம்பி தங்கை


சுடும் வரை சூரியன்
சுற்றும் வரை பூமி
பொருத்தது போதும்
பொங்கி எழு என் தமிழா...

ஜாதி மத இன பாகுபாடின்றி
ஒன்று சேருவோம் நம் குலம் தழைக்க...
அரைநூற்றாண்டுகளாய் அமைதிகாத்தது
நன்முறை வேண்டி...

இன்றோ ஈழத்தில் என் தாய்
தகப்பன் தம்பி தங்கை...
பாதுகாப்பு எனும் பெயரில்
பாதையின்றி வாழவழியின்றி வதைகப்படுகின்றார்கள்...
புழு கூட தீண்டும் போது நெளிந்து தன்
எதிர்ப்பினை காட்டும்....
என் தமிழன் கேட்டால் வன்முறையாம்...

ஒன்றுபடு தமிழா...
இன்றேனும் விழித்துக்கொள்
இல்லையேல் தமிழன் எனும் இனம்
தரையோடு தரையாய்.....

No comments:

Post a Comment